Archive for 'தமிழமுது'
விருந்தோம்பல்
விவேக சிந்தாமணி – 2.55 ************************************ விருந்தின னாக வொருவன்வந் தெதிரின் வியத்தனன் மொழியினி துரைத்தல் திருந்துற நோக்கல் வருகென வுரைத்த லெழுதல்முன் மகிழ்வன செப்பல் பொருந்துமற் றவன்ற னருகுற விருத்தல் போமெனிற் பின்செல்வ தாதல் பரிந்துநன் முகமன் வழங்கலிவ் வொன்பா னொழுக்கமும் வழிபடும் பண்பே. ஒருவர் விருந்தினனாக மற்றொருவர் இல்லத்திற்கு வந்து எதிரே நின்றால், அந்த வீட்டுக்குடையவன் விருந்தினர் வரவைப்பற்றி வியப்படைதல், நல்ல சொற்களைக் கூறுதல், இனிமையாக எடுத்துக் கூறுதல், விருப்பத்துடன் பார்த்தல், வருக வருக [...]
Posted: July 11th, 2010 under தமிழமுது, விவேக சிந்தாமணி.
Comments: none
வாழ்வைப் பிளக்கும் கோடரி
விவேக சிந்தாமணி – 2.54 *********************************** கோபத்தாற் கெளசிகன் றவத்தைக் கொட்டினான் கோபத்தா னகுடனுங் கோல மாற்றினான் கோபத்தா லிந்திரன் குலிசம் போக்கினான் கோபத்தா லிறந்தவர் கோடி கோடியே. கெளசிகன் – விசுவாமித்திரன் நகுடன் – சந்திர வம்சத்து அரசன் குலிசம் – வச்சிராயுதம் விசுவாமித்திரன் கோபப்பட்டு வசிட்டரோடும் இன்னும் மற்றவரிடத்தும் சண்டையிட்டு, சாபமிட்டுத் தான் சேர்த்து வைத்திருந்த தவ வல்லபத்தை(வலிமை) இழந்தான். சந்திர வமிசத்து அரசனான நகுடன் நூறு அசுவமேத யாகங்களைச் செய்து இந்திர பதவியை [...]
Posted: July 6th, 2010 under தமிழமுது, விவேக சிந்தாமணி.
Comments: 2
தவிர்க்கவேண்டிய சொற்கள்
தனித்தமிழில் உரையாடும்பொழுது சமக்கிருதச் சொற்களைப் பயன்படுத்தாதிருத்தல் நலம். அத்தகைய சொற்களில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளேன். இம் மின்னூலைத் தரவிறக்கச் சொடுக்குக:
Posted: July 1st, 2010 under கட்டுரைகள், தமிழமுது.
Comments: 2


