Archive for 'தாகி பிரபம்'
மனத் தூய்மை
அமைதியை அடைய மனத் தூய்மை அவசியம். மனத் தூய்மை இருப்பின் அமைதியைத் தேடிப் போகவேண்டாம். உனக்கு அமைதி தானே கிட்டும். எவருக்கும், எதற்கும் உன்னால் தீங்கு உண்டாகாது. உன்னிடம் தீமையற்ற தூய்மை இருப்பின் உலகை வசமாக்கலாம்.
மிகக் கொடிய மிருகங்கள்கூட உன்முன் அமைதியாய் இருக்கும். உன்
பார்வையில் எல்லாம் ஒன்றாகத் தோன்றும். அப்பொழுது உனக்கு கொல்லாமை கைவரப்பெறும். பின்னர் காணும் உயிர் அனைத்திலும் உன்னைக் காண்பாய்.
இந்நிலையடைய மனத் தூய்மை கட்டாயம் வேண்டும்.
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம், தமிழமுது, தாகி பிரபம்.
Comments: none
தாகி பிரபம்-3
இந்நூல் கூறும் கருத்துக்கள்:
இந்நூலில் செயலற்ற சொல் எதுவும் இல்லை. ஒவ்வொரு சொல்லையும் விரிக்கின் ஒவ்வொரு பக்கம் எழுதலாம். இடம், காலம் கருதி முக்கியமான சூக்குமக் கருத்தை மட்டும் விளக்கியுள்ளோம்.
இறைவா, நீ, சூக்குமமாய் மறைந்து இருந்தபோது நான் உன்னுடன்
கலந்திருந்தேன். அப்போது, என்னை யான் கண்டேன். உன்னில் என்னைக் கண்டேன். என்னில் உன்னைக் கண்டேன். உன்னில் யான் பனிக்கட்டி கரைந்து நீரில் கலப்பதுபோல் இடைவெளி யின்றிக் கலந்திருந்தேன். அப்போது நானோ ஏகாந்த நிலையிலிருந்தேன்.
ஏகாந்தம்:
நானேயல்லாது பிறிதொன்றையும் காணாது நானே என்னில் என்னைக் [...]
Posted: April 3rd, 2008 under ஞானம், தாகி பிரபம்.
Comments: 5
தாகி பிரபம்-2
இறை கேட்டது: உமக்கு நாசியிருந்ததா?
யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் நாசியாயிருந்தது.
இறை கேட்டது: உமக்கு வாயிருந்ததா?
யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் வாயாயிருந்தது.
இறை கேட்டது: உமக்கு ஆக்கையிருந்ததா?
யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் எனதாக்கையாயிருந்தது.
இறை கேட்டது: இப்படியே பரிபூரணமாயிருந்தபோது, உமக்கு ஆரம்பமும் முடிவுமிருந்தனவா?
யான் விடுத்தது : இறைவா, ஆம். ஆரம்பமும் முடிவுமிருந்தன.
இறை கேட்டது: அது என்ன?
யான் விடுத்தது : இறைவா, நானே பரிபூரணமானபோது பரிபூரணமான எனக்கு நானே ஆரம்பமும் முடிவுமானேன்.
இறை கேட்டது: நான் [...]
Posted: April 3rd, 2008 under ஞானம், தாகி பிரபம்.
Comments: none
