Archive for 'தாகி பிரபம்'
மின் – நூல் – தாகி பிரபம்
அன்புடையீர், என் இணைய தளத்தில் வெளிவந்த “தாகி பிரபம்” என்னும் சூபி இலக்கியக் கருவூலத்தை மின் – நூலாக்கித் தந்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அதைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். படத்தைச் சொடுக்கித் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Posted: June 2nd, 2010 under ஞானம், தாகி பிரபம்.
Comments: 6
தாகி பிரபம்-3
இந்நூல் கூறும் கருத்துக்கள்: இந்நூலில் செயலற்ற சொல் எதுவும் இல்லை. ஒவ்வொரு சொல்லையும் விரிக்கின் ஒவ்வொரு பக்கம் எழுதலாம். இடம், காலம் கருதி முக்கியமான சூக்குமக் கருத்தை மட்டும் விளக்கியுள்ளோம். இறைவா, நீ, சூக்குமமாய் மறைந்து இருந்தபோது நான் உன்னுடன் கலந்திருந்தேன். அப்போது, என்னை யான் கண்டேன். உன்னில் என்னைக் கண்டேன். என்னில் உன்னைக் கண்டேன். உன்னில் யான் பனிக்கட்டி கரைந்து நீரில் கலப்பதுபோல் இடைவெளி யின்றிக் கலந்திருந்தேன். அப்போது நானோ ஏகாந்த நிலையிலிருந்தேன். ஏகாந்தம்: நானேயல்லாது [...]
Posted: April 3rd, 2008 under ஞானம், தாகி பிரபம்.
Comments: 5
தாகி பிரபம்-2
இறை கேட்டது: உமக்கு நாசியிருந்ததா? யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் நாசியாயிருந்தது. இறை கேட்டது: உமக்கு வாயிருந்ததா? யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் வாயாயிருந்தது. இறை கேட்டது: உமக்கு ஆக்கையிருந்ததா? யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் எனதாக்கையாயிருந்தது. இறை கேட்டது: இப்படியே பரிபூரணமாயிருந்தபோது, உமக்கு ஆரம்பமும் முடிவுமிருந்தனவா? யான் விடுத்தது : இறைவா, ஆம். ஆரம்பமும் முடிவுமிருந்தன. இறை கேட்டது: அது என்ன? யான் விடுத்தது : இறைவா, [...]
Posted: April 3rd, 2008 under ஞானம், தாகி பிரபம்.
Comments: none


