ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Categories

Tags

"அ"காரம் Add new tag அசபை அநுமன் அன்பு அம்மை அரன் அருள் அறிவு ஆன்மா இரேசகம் ஓங்காரம் ஓரெழுத்து கடமை கடவுள் கரு கருத்து கலை கல்வி கவலை காயம் கும்பகம் குரு குறள் குறவஞ்சி குலம் கைலைமலை சிவம் சூபித்துவம் சோதிடம் ஞானம் ஞானவெட்டியான் நவராத்திரி நாடிகள் நாதவிந்து நினைவு பக்தி பஞ்சபட்சி சாற்றிறம் பிண்டம் மதம் மனம் முருகன் வாசி வாயு விந்து

Archives


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Archive for 'ஞான முத்துக்கள்'

பழமொழி 600

1.அகத்தினழகு முகத்தில் தெரியும்.
2.அகல உழுகிறதை விட ஆழ உழு.
3.அகல் வட்டம் பகல் மழை.
4.அக்கா இருக்கும்வரைதான் மச்சான் உறவு
5.அக்கா வைச்சிருந்தா அரிசி; தங்கை வச்சிருந்தா தவிடு.
6.அசடுக்கு வாக்கப்பட்டு ஆயிரம் வருடம் வாழ்வதைவிட, சமத்துக்கு வாக்கப்பட்டு சட்டுன்னு தாலி அறுக்கலாம்.
7.அசைந்து தின்பது யானை, அசையாமல் தின்பது வீடு.
8.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
9. அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது.
10.அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
11.அடக்கமே பெண்ணுக்கு அழகு
12.அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
13.அடாது செய்தவன் படாது படுவான்.
14.அடி நாக்கிலே நஞ்சும் நுனி [...]

திருமணச் சடங்குகளும் நோக்கமும்

என் சிறுபுத்திக்கு எட்டியவரை:
அம்மி மிதிப்பது = பெண்ணின் கால் ஊனமற்ற நிலையில் உள்ளதாஎனச் சரி பார்ப்பதற்கும், உனக்குஎத்துன்பம் வந்தாலும் உன் காலடியில் நின்று
உன்னைத் தூக்கிக் கரைசேர்ப்பேன் என உறுதி கூறுவதற்காகவும் இருக்கலாம்.
அருந்ததி பார்ப்பது = பெண்ணின் கண்பார்வையை சோதிப்பதற்காகவும், அருந்ததியைப்போல் நீயும் இருக்கவேண்டும் எனச் சொல்லுவதற்காகவும் இருக்கலாம்.
தாலியணிவித்தல் = மிஞ்சி போடுதல் = இப்பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டது என அடுத்தவர்களுக்குக் காட்டுவதற்காக.
பூணூல் அணிதல் = முறையாக [...]

ஐம்பதா? ஐம்பத்தொன்றா?

“முத்திதரு மூலத்தி லட்சரமே நாலு
முதலான சுவாதிட்டான மெழுத்தா றாகும்
பத்திதரும் பூரகத்தி லெழுத்தோ பத்து
பாங்கான அநாகதத்தி லெழுத்தீ ராறாஞ்
சித்திரமாம் விசுத்திதனி லெழுத்தீ ரெட்டாம்
சிறந்தவாக் கினையிலெழுத் திரண்டு மாகும்
சத்தியெனு மம்பரத்தி லெழுத்தொன் றாச்சு
சார்வாமைம் பத்தோரட் சரங்கா ணாண்டே.”(ஞானம் எட்டி)
“வட்டமிட்ட சட்கோணபாரின் மேலும்வளர்ந்த
…………விதழீராறாமங்குலத்தில்
திட்டமிட்டவனாகதத்தில் வீற்றிருந்த சிறந்தருளும்
………..ருத்திரனுத்திரியைப்போற்றி
வெட்டவெளிவேதமறை நான்குமோதும் வேதமெலாந்
……….திருநீறாயானவாறும்
அட்டதிசையறிந்துணர்ந்த பெரியோர்பாத மைம்பத்
………..தோரட்சரமுங் காப்புத்தானே.”
வட்டமிட்டுள்ள அறுகோணத்தின்மேல் வளர்ந்திருக்கின்ற பன்னிரு இதழ்களையுடைய அநாகதத் தானத்தில் வீற்றிருக்கும் உருத்திரன், உருத்திரியைப் [...]