ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Categories

Tags

"அ"காரம் Add new tag அசபை அநுமன் அன்பு அம்மை அரன் அருள் அறிவு ஆன்மா இரேசகம் ஓங்காரம் ஓரெழுத்து கடமை கடவுள் கரு கருத்து கலை கல்வி கவலை காயம் கும்பகம் குரு குறள் குறவஞ்சி குலம் கைலைமலை சிவம் சூபித்துவம் சோதிடம் ஞானம் ஞானவெட்டியான் நவராத்திரி நாடிகள் நாதவிந்து நினைவு பக்தி பஞ்சபட்சி சாற்றிறம் பிண்டம் மதம் மனம் முருகன் வாசி வாயு விந்து

Archives


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Archive for 'ஞானம் எட்டி'

நண்பர் மாசிலாவுக்கு

தங்களின் பெயர் “மாசிலா” என வைத்துள்ளீர்கள்; ஆயினும் தங்களின் மின்னஞ்சலில் அது உள்ளதே!
//வந்தேறி பரதேசிகளான பார்ப்பனன் கொண்டுவந்து புகுத்திய பைத்தியக்கார சிவன் எனும் மாயத்தில் புத்தியிழந்து எவனோ வேறு ஒரு பரதேசி சுத்தமான தமிழில் இந்த மண்ணுக்கே சொந்தமான பூர்வீக குடிகளில் ஒர்வர்களான பறையர்களை சாடி கீழ்த்தனமாக எழுதி இருந்தால் நீங்கள் எந்த உரிமையில் அதை தமிழ்மணத்தில் பதித்தீர்கள்?//
“வந்தேறி பரதேசிகளான பார்ப்பனன் கொண்டுவந்து புகுத்திய பைத்தியக்கார சிவன் எனும் [...]

ஞானம் எட்டி-102

102.வஞ்சகமான தோரஞ்சு பெரும்பூதம்
பஞ்சறிவாகவுங்குஞ்சர வீட்டினில்
அஞ்செழுத்துள் வளரைம்பத்தோரட்சரம்
ஆனந்தமாகவலங்கார மாளிகை
கொஞ்சிவிளையாடும் ரஞ்சிதவீட்டினில்
நெஞ்சறியுங் கமலாலயமைம்பொறி
செஞ்சொல்மொழிசிவ சிங்காதனத்தினில்
கஞ்சமலராயிரத்தெட் டிதழினால்.
குஞ்சரம் = மருள்
பஞ்சறிவு = அறிதல், உணர்தல், கல்வி, புத்தி, போதனை
கஞ்சம் = தாமரை
பெரிய பூதங்கள் ஐந்தும், ஐந்து அறிவாகக் கபடமாய் வசிக்கும் மருள் நிறைந்த மனத்துடன், ஐம்பத்தோரெழுத்தும் அடங்கித் திருவைந்தெழுத்து எனப்படும் “நமசிவய” என்னும் எழுத்தால் கட்டப்பட்ட ஆநந்தம் நிறைந்த அலங்கார மாளிகையாம் உடலில் கொஞ்சி விளையாடுகின்றன. அதில் உள்ள நெஞ்சினை அறியும் கமலாலய வீட்டில், செம்மொழியாலாகிய சிவசிங்காதனத்தில், ஆயிரத்தெட்டிதழ்களையுடைய தாமரை மலராசனத்தினால்.

ஞானம் எட்டி-101

101.நகாரமகாரமிரண்டையுஞ் சேர்த்து
நடுவேசதுட் கோணவீட்டையுங்கட்டிச்
சிகாரவகாரயகாரமது கொண்டுச்
சித்திரச்சாவடி வித்தார மாகவும்
அகாரமதுக்குள் ளேயையுமென்றட்சரம்
அவ்வெழுத்தாலே யகண்டசராசரம்
உகாரமதுக்குளுயர்ந்த கிலியெனும்
உவ்வெழுத்தாலுமுதித்த சவ்வானதும்.
நகாரம், மகாரம் என்னும் சுவாதிட்டான மணிபூரக எழுத்துக்களைச் சேர்த்து, அதற்குநடுவே நாற்கோண வீட்டைக் கட்டி, சிகார வகார யகாரமென்னும் மூன்றையுங்கொண்டு சித்திரச் சாவடியையும், அகாரமென்பதற்குள் ஐயுமென்றஅட்சரமும், அவ்என்னும் எழுத்தால் அகண்ட விரிந்த சராசரம், உகாரத்தாலே உயர்ந்தத கிலியெனும் உவ்வெழுத்தாலும் உண்டான சவ் எனும் பீசமும்…

 
அவ்வெழுத்து = ஆன்ம எழுத்து
அகரம்(அவ்) = சிவன்
சகரம்(சவ்) = சிவை(அம்மை)
உகரம்(உவ்)= தீ, ஆன்மத் தீ

“அவ்வுண்டு சவ்வுன் டனைத்துமங் குள்ளது
கவ்வுண்டு நிற்குங் [...]