Archive for 'ஞானக் குறள்'
ஞானக் குறள்-(301-310)
3. தன்பால்
*************
31. உயர்ஞான தரிசனம் (301-310)
************************************************
301. கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப்
பிண்டமு மூழி பிரியா.
சூரிய சந்திர அக்கினி கலைகளை உந்திக்கமலத்தில் உள்ள அக்கினி மண்டலத்தில் சேர்த்துவிட்டால், உயிரையும் உடலையும் காலம்(ன்) பிரிக்கச் சக்தியற்றுப் போய்விடும்.
302. வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத்
தள்ளுமின் கால சரம்.
திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று கிழமைகளிலும், சந்திர கலையைப் பிங்கலையில் சேர்க்க வேண்டும்.
303. செவ்வாய் சனிநா யிறுவல மாகவே
கொள்ளிலிவ் வாறிடரு [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 4
ஞானக் குறள்-(291-300)
3.தன்பால்
***************
30. துரிய தரிசனம் (291-300)
**************************************
291. வன்னிய தெட்டு மதியம் பதினாறு
முன்னிய பன்னிரண்டு முள்.
முதன்மையான சூரியனுக்குப் பன்னிரண்டு கலைகளும், அங்கிக்கு எட்டு கலைகளும், சந்திரனுக்குப் பதினாறு கலைகளுமுள்ளன.
292. சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம்
பாருமி னீது பயன்.
சூரியனோடு அக்கினி கலந்தபின் சந்திரன் உதிப்பான். அந்த ஆநந்தத்தை நீங்களே உணர்ந்து அறிக.
திருமந்திரம்:
“குரவ னுயிர்முச் சொரூபமுங் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
[...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 4
ஞானக் குறள்-(281-290)
3. தன்பால்
****************
29. மெய்நெறி (281-290)
********************************
281. செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ்
சொல்லு மவுனத் தொழில்.
உந்திக்கமலத்தில் செய்யும் ஞானவினையினால் முக்காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.
திருமந்திரம்:
“விளங்கிடும் வாயுவை மேலெழ வுன்னி
நலங்கிடுங் கண்டத்து நாபியி னுள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே.”
கும்பிச்சு = நிறைந்து. நலங்கிடுதல் = ஒடுங்குதல். ஒடுங்கும் கழுத்திலும் கொப்பூழிலும் உள்ள உயிர்ப்பை மேல்நோக்கி [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: none
