ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Categories

Tags

"அ"காரம் Add new tag அசபை அநுமன் அன்பு அம்மை அரன் அருள் அறிவு ஆன்மா இரேசகம் ஓங்காரம் ஓரெழுத்து கடமை கடவுள் கரு கருத்து கலை கல்வி கவலை காயம் கும்பகம் குரு குறள் குறவஞ்சி குலம் கைலைமலை சிவம் சூபித்துவம் சோதிடம் ஞானம் ஞானவெட்டியான் நவராத்திரி நாடிகள் நாதவிந்து நினைவு பக்தி பஞ்சபட்சி சாற்றிறம் பிண்டம் மதம் மனம் முருகன் வாசி வாயு விந்து

Archives


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Archive for 'ஞானம்'

யாரோ சொன்னது – 23

23. “உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொருவனைவிட முந்தச் செய்கிறது.”

திரு உத்திரகோச மங்கை

ஈசனின்
திருநாமங்கள்
பாதாள லிங்கேசுவரன்
பிரளயாகேசுவரன்
துரிதாபகன்
கல்யாணசுந்தரன்
அன்னையின் திருநாமங்கள் -
மங்களேசுவரி
மங்களதாவினி
புட்பதனி
சுந்தர நாயகி
பூண்முலையாள்
கல்யாண சுந்தரி

திரு = அழகு
உத்ரம் = உபதேசம்
கோசம் = இரகசியம்
மங்கை = பெண்
மூலவர் – மங்களநாதர்
சிறப்பு – சுயம்பு
அன்னை – மங்களேசுவரி
அற்புதம் – மரகத நடராசர்
தலமரம் – இலந்தை
தீர்த்தம் – அக்கினி தீர்த்தம்
பதிகம் – தேவாரம்
ஊர் – உத்திரகோச மங்கை
மாவட்டம் – இராமநாதபுரம்
புராண பெயர் – பதலி கிராமம்
மண்டோதரிக்குத் திருமணமாகாத காலம். அவள் ஈசனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தாள். ஈசன் அவளுக்குக் காட்சி தந்தபின்தான்  அவளுக்குத் திருமணம் ஆயிற்று. அப்போது [...]

பழமொழி 600

1.அகத்தினழகு முகத்தில் தெரியும்.
2.அகல உழுகிறதை விட ஆழ உழு.
3.அகல் வட்டம் பகல் மழை.
4.அக்கா இருக்கும்வரைதான் மச்சான் உறவு
5.அக்கா வைச்சிருந்தா அரிசி; தங்கை வச்சிருந்தா தவிடு.
6.அசடுக்கு வாக்கப்பட்டு ஆயிரம் வருடம் வாழ்வதைவிட, சமத்துக்கு வாக்கப்பட்டு சட்டுன்னு தாலி அறுக்கலாம்.
7.அசைந்து தின்பது யானை, அசையாமல் தின்பது வீடு.
8.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
9. அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது.
10.அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
11.அடக்கமே பெண்ணுக்கு அழகு
12.அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
13.அடாது செய்தவன் படாது படுவான்.
14.அடி நாக்கிலே நஞ்சும் நுனி [...]