Archive for 'ஞானம்'
பொங்கல் வாழ்த்து
எல்லோரும் எப்பொழுதும் எல்லாமும் பெற்று இனிதே வாழ என் இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.
Posted: January 13th, 2011 under ஞானம்.
Comments: 5
சாகாக் கலை
சாகாக் கலை பயில வழி என்ன? “இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி துதிக்கையா லுண்பார்க்குச் சோரவும் வேண்டாம் உறக்கத்தை நீக்கி யுணரவல் லார்கட்கு இறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே.” இடக்கை = இடகலை. வலக்கை = பிங்கலை. துதிக்கை = சுழுமுனை; நுதிக்கை; முனையுள்ள கை. இடநாடி வலநாடி வழியாகக் கீழிறங்கும் அமுதை மாற்றி மேலேற்றி, உள்நாக்கைத் துதிக்கை போல் வளைத்து நடுத்துளை தவிர மற்றவற்றை அடைத்து, நடுத்துளை வழியக அருந்துவோர்க்கு இறப்புக்கு அஞ்சிச் சோர்வு உண்டாகாது. [...]
Posted: January 7th, 2011 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 1
அன்புடன் செய்யும் பூசை
இறைவனுக்குச் செய்யும் பூசை ஆத்மார்த்தம், பரார்த்தம் என இரு வகையாம் என்பார்கள். பரார்த்தம் என்பது, தன்னைத் தவிற ஏனைய உயிர்களின் நன்மைக்காகச் செய்யப்படுவது. அர்ச்சகர்கள் பரார்த்த பூசை என்கிற வகையில் பக்தர்களுடைய நலனுக்காக, அருச்சனை, அபிடேகம்(முழுக்காட்டு) முதலியவை செய்தாலும், பிரபஞ்சங்களை எல்லாம் காத்தருளுகின்ற எம்பெருமான் ஆன்மாக்களின் நன்மைக்காக இதைச் செய்கிறான் என்று அன்பு உணர்வுடன் அவர்கள்செய்யும் போது இறைவன் ஏற்றுக் கொள்கிறான். பலன்களையும் தருகிறான். ஆனால் பூசை என்பது ஒரு சம்பிரதாயமாகிவிட்டதை நாம் காண்கிறோம். திருக்கோயில்களில் பக்தர்களுடைய [...]
Posted: October 6th, 2010 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 3

