Archive for 'சிந்தனைக்கு'
சிந்தனைக்கு – 15
சிந்தனைக்கு – 15
************************
13.”முரட்டுத்தனமான சீர்திருத்தப் போக்கு முடிவில் சீர்திருத்தத்தையே தடைப்படுத்திவிடும். யாரையும் தீயவன் என்று கூறலாகாது. ‘நீ நல்லவன்; இன்னும் நல்லவனாய் இரு’ என்று சொல்லுங்கள்.”
- விவேகாநந்தர்
Posted: February 23rd, 2009 under சிந்தனைக்கு, விவேகாநந்தர்.
Comments: none
சிந்தனைக்கு – 14
சிந்தனைக்கு – 14
***********************
14.”ஏழை மக்களை அரைத்து, அரைத்துக் கசக்கிப் பிழிந்த செல்வத்தை வைத்துக்கொண்டு, பகட்டாக உடை அணிந்து, உலாவருபவர்கள் பதர்கள். பசியால் வாடும் காட்டுமிராண்டிகளைக் காட்டிலும் மோசமாக வாழ்ந்துகொண்டு இருக்கும் கோடான கோடி ஏழை மக்களுக்கு உதவாது வாழும் இவர்களைப் பதர் என்றுதான் கூறவேண்டும்.”
- விவேகாநந்தர்
Posted: February 21st, 2009 under சிந்தனைக்கு, விவேகாநந்தர்.
Comments: none
சிந்தனைக்கு – 13
சிந்தனைக்கு – 13
************************
13.”பணத்தையும் அதிகாரத்தையும் சேர்த்துப் பங்கிட்டுக்கொள்ளும் கருத்துடன் இரு சாரார் இணைதல் கூடாது. பலவீனருக்கு உதவவும், அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மனிதர்களுக்கு அறிவு கிட்டச் செய்யவும், இழந்த பண்டைப் பெருமையை நாடு மீண்டும் பெறவும், அவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.”
- விவேகாநந்தர்
Posted: February 21st, 2009 under சிந்தனைக்கு, விவேகாநந்தர்.
Comments: none
