Archive for 'பஞ்சபட்சி சாற்றிறம்'
பஞ்சபட்சி சாற்றிறம்-காப்பு-3
காப்பு
*******
3.”ஒன்று திசைக்குருவி யொன்றிவரு மோர்தூதன்
நின்றநிலை யாருடத்தில் நேருமே – நன்று
வழுவா துரைத்தாயும் வல்லவர்கள் சொன்ன
முழுவா கடத்தின் முறை.”
நன்றாக யாதொரு தவறுமின்றி வழுக்காது ஆய்ந்து உரைக்கும் வல்லவர்கள் சொன்ன முழுமையான பட்சி நூலின் முறையாவது, தன்னிடம் வினாவெழுப்ப வந்த தூதன், அவன் வந்த திசை, நின்ற இடம், நிற்கும் நிலை, எழுப்பிய வினாவின் முதலெழுத்து ஆகியவற்றை ஆய்ந்து சொல்லலாம். இங்கு [...]
Posted: June 8th, 2008 under சித்தர் இலக்கியம், திருவாசகம், பக்தி, பஞ்சபட்சி சாற்றிறம்.
Comments: none
பஞ்சபட்சி சாற்றிறம்-காப்பு – 2
அகத்தியர் பஞ்சபட்சி சாற்றிறம் ********************************** 2. “துய்யமலருறையுந் தோகா யுன தைம்பொற் செய்ய மலர்ப்பாதஞ் சேவித்தேன் – வையத் தைந்து வகைப்பட்சி யமையுங் குணமென்றன் சிந்தை தனினிற்கவே செய்.”
பரிசுத்தமான வெண்தாமரையில் எழுந்தருளியிருக்கிற தோகைமயிலைப் போன்ற கலைவாணியே!
உன்னுடைய அழகிய பொன்போன்ற சிவந்த தாமரைமலர் போன்ற திருவடித்தாள் வணங்கினேன்.
ஆகையால், நீ இவ்வுலகில் இருக்கும் சகலசீவராசிகளையும் பட்சிகளாகப் பாவித்துப் பிரித்து, அதனதன் குணம் முதலியவைகளை விளக்கும் கலையை எம்மனத்தில் உணர்த்தி இருக்கச் செய்யவேண்டும்.
Posted: June 7th, 2008 under சித்தர் இலக்கியம், பஞ்சபட்சி சாற்றிறம்.
Comments: none
பஞ்சபட்சி சாற்றிறம்-காப்பு – 1
காப்பு
——-
1.உன்னியொருவன் உரைத்த முதலெழுத்தைப்
பன்னிப் பறவையாய்ப் பாவித்து – வன்னி
உதைய திசைப்பட்சி யுண்மை யுரைக்கக்
கதைகா வியப்பொருளே காப்பு.
உன்னி = தியானித்து, கவனத்துடன்
பன்னி = பண்ணி = அமைத்து
வன்னி = வன்னி மரம், நெருப்பு = குண்டலிப் பாதையாம் நெருப்பாறு
நற்சேத்திரத்தை வைத்துத்தான் (புள்,பறவை) பட்சி நிணயித்தல் வேண்டும். அது தெரியாதபோது: வந்தவன் உரைக்கும் முதல் எழுத்தைக்கொண்டு, அதை அமைத்துப் பறவையாய் உருவகப்படுத்தி அக்கினி திசையாம் தென்கிழக்கில் உதிக்கும் பட்சிகளின் உண்மையை உரைக்க இக்கலை கதையெனினும் காவியமெனினும் அதனுள்ளிருக்கும் மெய்ப்பொருளே காப்பு.
(யோக [...]
Posted: June 4th, 2008 under சித்தர் இலக்கியம், பஞ்சபட்சி சாற்றிறம்.
Comments: none
