Archive for 'ஞானரெத்தினக் குறவஞ்சி'
சிவவாக்கியர்-2
2 .சரியை விலக்கல் ********************** 2.ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே. சீவனாம் சிவன் தன்னுள்ளே ஓடி ஓடித் தன்னுள் கலந்துள்ள சோதியாய் உள்ளது. அதை நாடி நாடிக் கண்டுகொள்ள இயலாது வாழ்வின் நாட்களும் கழிந்துபோய், உடல் வாடி, உள்ளமும் நொந்து வாடி மாண்ட மனிதர்கள்(மனுக்கள்) கோடான கோடியாம். இன்னும்எளிதாய்ச் சொல்ல: உடலின் உள்ளிருக்கும் ஏக இறையை இருக்குமிடத்தைவிட்டு உடலுக்கு வெளியே [...]
Posted: April 9th, 2008 under சித்தர் இலக்கியம், ஞானம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: none
ஞானரத்தினக் குறவஞ்சி (31-35)
31.எங்கும் பரந்த பெரும் பொருளென்னடி சிங்கி? – அது அங்கிங்கு மெங்குமாய்க் கண்ட பெருவெளி சிங்கா. எங்கும் பரந்த பெரும் பொருள் என்னடி சிங்கி? அது அங்கு, இங்கு எங்குமாய்ப் பரந்த சிதாகாயப் பெருவெளி சிங்கா! 32.அண்ணிணு மெண்ணம் அழியாப் பொருளென்ன சிங்கி – இரு கண்ணையு மூட இருளழி யாப்பொருள் சிங்கா! எண்ணமாகிய நினைவு கிட்டினாலும் அழியாத பொருள் என்னடி சிங்கி? அது கண்களை மூட இருக்கும் இருள்தானடா சிங்கா! (கன்ஸூல் மஹபியா) 33.ஆங்கார வுடலுக்கு [...]
Posted: April 9th, 2008 under சித்தர் இலக்கியம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: none
ஞானரத்தினக் குறவஞ்சி (21-30)
21.”ஆசைகொண் டுநம்மை யாட்டுவா ராரடி சிங்கி? – அது அக்கினி வாயுநீர் மண்ணின் மகிமையே சிங்கா!” ஆசைகொண்டு நம்மை இப்படி ஆட்டிப் படைப்பவர் யாரடி சிங்கி? ஐம்புலன்களில் ஆகாயம் தவிர எஞ்சி நிற்கும் அக்கினி, வாயு, நீர், மண் ஆகியவைதானடா சிங்கா!” 22.”ஆசைபா சப்பலன் அனுபோகம் ஆரடி சிங்கி? – அது அங்கம் பொருந்திய பங்குமண் அல்லவோ சிங்கா!” ஆசை, பாசம் முதலியவைகளின் பலன்களை அனுபவிப்பது(அனுபோகம்) யாரடி சிங்கி? மண் தத்துவத்தாலாகிய அங்கங்கள் பொருந்திய உடல்தானடா சிங்கா. [...]
Posted: April 9th, 2008 under சித்தர் இலக்கியம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: none





