Archive for 'ஞானரெத்தினக் குறவஞ்சி'
ஞானக் குறவஞ்சி(41-45)
41.கற்பக வாசி கலந்திடும் எவ்விடம் சிங்கி? – அது
உற்பன மூலத்தி னுள்ளொளி யல்லவோ சிங்கா!
கற்பக வாசி = மூலவாசி
உற்பனம் = உண்மை = உள்மெய்
மூலவாசியெனும் உயிர் மூச்சு கலந்த இடம் எதடி சிங்கி?
அது, உள் மெய்க்குள் இருக்கும் உள்ளொளி உற்பத்தியாகும் மூல ஆதரத் தானமாகுமடா, சிங்கா.
42.சத்தம் பிறந்திடுஞ் சற்குரு வேதடி சிங்கி? – அது
உற்ற சுவாசம் உயிர்நிலை யல்லவோ சிங்கா!
ஒலி பிறக்கும் இடத்தில் உள்ள ஆசான் எதடி,சிங்கி?
அது, நடமாடும் சுவாசமும் ஒலி பிறக்கும் இடமும் சங்கமாகும் இடமே, [...]
Posted: April 12th, 2008 under சித்தர் இலக்கியம், ஞானம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: none
ஞானக் குறவஞ்சி(36-40)
36.சித்த னொளிவு கலந்திட மெவ்விடஞ் சிங்கி? – அது
அத்தன் நடனந்தா னாடிய தற்பரஞ் சிங்கா!
சித்தத்தின் ஒளி எந்த இடத்தில் கலக்கும் சிங்கி?
அது சீவன் நடனமாடும் சிதாகாயம் சிங்கா!
37.உத்தமப் பொருளுக்கு உயிரெழுத் தென்னடி சிங்கி? – அது
நச்சர வாடும் நடுநிலை யல்லவோ சிங்கா!
உயிரெழுத்து = உயிர்நிலை
நச்சு அரவு = குண்டலினிப் பாம்பு
சீவனாகிய உத்தமப் பொருளுக்கு உயிர்நிலை எங்கேயடி சிங்கி?
அது (நச்சு அரவு) குண்டலினிப் பாம்பு ஆடுகின்ற நடுவிடமே சிங்கா!
38.எட்டெழுத் தாக எழுந்தெழுத் தென்னடி சிங்கி? – அது
மட்டி லடங்கா [...]
Posted: April 12th, 2008 under சித்தர் இலக்கியம், ஞானம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: 4
சிவவாக்கியர்-2
2 .சரியை விலக்கல்
**********************
2.ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே.
சீவனாம் சிவன் தன்னுள்ளே ஓடி ஓடித் தன்னுள் கலந்துள்ள சோதியாய் உள்ளது. அதை நாடி நாடிக் கண்டுகொள்ள இயலாது வாழ்வின் நாட்களும் கழிந்துபோய், உடல் வாடி, உள்ளமும் நொந்து வாடி மாண்ட மனிதர்கள்(மனுக்கள்) கோடான கோடியாம்.
இன்னும்எளிதாய்ச் சொல்ல:
உடலின் உள்ளிருக்கும் ஏக இறையை இருக்குமிடத்தைவிட்டு உடலுக்கு வெளியே ஓடியோடி யோடியோடித் தேடி, கண்டவர் சொல்லுவனவற்றை நம்பி அதையே நாடிநாடிக் [...]
Posted: April 9th, 2008 under சித்தர் இலக்கியம், ஞானம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: none
