Archive for 'சிவவாக்கியர் பாடல்கள்'
சிவவாக்கியர் – 94
சிவவாக்கியர் – 94 94. என்னவென்று சொல்லுவே னிலக்கண மிலாததைப் பன்னுகின்ற செந்தமிழ்ப் பதங்கடந்த பண்பென மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல் என்னகத்து ளீசனும் யானுமல்ல தில்லையே செந்தமிழ்ப் பாடலுக்கு இலக்கணமில்லையோ? அப்படியானால் அது செந்தமிழ்ப் பண் ஆகாது. ஆகாயத்தில் மின்னல் தோன்றி ஆகாயத்திலே மறைந்து விடுவது போல என் உடலிலே மின்னல் போலத் தோன்றி என்னுள் கலந்து ஐக்கியமாகிவிடும் சக்தியை உணர்ந்தால் என் உள்ளத்தில் ஈசனும் இல்லை; நானும் இல்லை. ஒன்று கலந்து விடும் நிலை [...]
Posted: April 6th, 2010 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள்.
Comments: none
சிவவாக்கியர் – 93
93. மந்திரங்க ளுண்டுநீர் மயங்குகின்ற மானிடர் மந்திரங்க ளாவது மரத்திலூற லன்றுகாண் மந்திரங்க ளாவது மதித்தெழுந்த வாயுவை மந்திரத்தை யுண்டவர்க்கு மரணமேது மில்லையே “இறைவனைத் துதிக்க மந்திரங்கள் உண்டு; அவைகள் எனக்குத் தெரியாதே!” என மயங்குகின்ற மானிடரே! மந்திரங்கள் மரத்தில் ஊற்றெடுத்து சாறாக வெளிவருவது அல்ல. மத்தித்து எழுந்த வாயுவை(வாசிக்குதிரை) மேலேற்றி அதன் மேலேறி சவாரி செய்ய அதுவே மந்திரமாகும். இப்படிச் செய்து பலனடைந்தோருக்கு மரணம் இல்லையாம்.
Posted: March 30th, 2010 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள்.
Comments: 4
சிவவாக்கியர் பாடல் – 92
92. அவ்வெனு மெழுத்தினா லகண்டமேழு மாகினாய் உவ்வெனு மெழுத்தினா லுருத்தரித்து நின்றனை மவ்வெனு மெழுத்தினால் மயங்கினார்கள் வையகம் அவ்வுமுவ்வு மவ்வுமா யமர்ந்ததே சிவாயமே அகாரமாகிய “அ” எனும் எழுத்தால் அகண்டம் ஏழும் ஆகினாய். உகாரமாகிய “உ” எனும் எழுத்தால் அவ்வகண்டங்கள் ஏழிலும் உயிர் இனங்கள் ஆகினாய். மகாரமாகிய “ம” எனும் எழுத்தால் அவ்வகண்டங்கள் ஏழிலும் உள்ள உயிர் இனங்களை மாயையில் மூழ்க வைத்தாய். அ, உ, ம ஆகியவை சேர்ந்த “ஓம்” எனும் பிரணவமாய் (மாயையிலிருந்து விடுவிக்க) [...]
Posted: March 26th, 2010 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள்.
Comments: 2


