Archive for 'சிவவாக்கியர் பாடல்கள்'
பழமொழி 600
1.அகத்தினழகு முகத்தில் தெரியும்.
2.அகல உழுகிறதை விட ஆழ உழு.
3.அகல் வட்டம் பகல் மழை.
4.அக்கா இருக்கும்வரைதான் மச்சான் உறவு
5.அக்கா வைச்சிருந்தா அரிசி; தங்கை வச்சிருந்தா தவிடு.
6.அசடுக்கு வாக்கப்பட்டு ஆயிரம் வருடம் வாழ்வதைவிட, சமத்துக்கு வாக்கப்பட்டு சட்டுன்னு தாலி அறுக்கலாம்.
7.அசைந்து தின்பது யானை, அசையாமல் தின்பது வீடு.
8.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
9. அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது.
10.அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
11.அடக்கமே பெண்ணுக்கு அழகு
12.அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
13.அடாது செய்தவன் படாது படுவான்.
14.அடி நாக்கிலே நஞ்சும் நுனி [...]
Posted: February 7th, 2009 under சிவவாக்கியர் பாடல்கள், ஞான முத்துக்கள், தமிழமுது, பழமொழிகள் 600.
Comments: none
சிவவாக்கியர் – 91
91. உடம்புயி ரெடுத்ததோ வுயிருடம் பெடுத்ததோ
உடம்புயி ரெடுத்தபோ துருவமேது செப்புவீர்
உடம்புயி ரிறந்தபோ துயிரிறப்ப தில்லையே
உடம்புமெய் மறந்துகண் டுணர்ந்துஞான மோதுமே.
உடலுக்கு உயிர் வந்ததா? அல்லது உயிருக்கு உடல் வந்ததா? அப்படி உடலுக்குள் உயிர் நுழைந்தது என்றால் அந்த உயிருக்கு உருவம் எது எனக் கூறுவீர். உடல் இறந்த பின்னரும் உயிர் இறப்பது இல்லை. ஆகையால் அந்த ஆன்மாவாகிய உயிர் ஆவியின் ஓட்டத்தில் சலனமற்ற கவனத்தை வைத்து ஒருமுகப்படுத்தி ஞானத்தை ஓதுவீர்களே!
திருமந்திரம்
*************
இன்புறு வண்டிங் கினமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற [...]
Posted: January 4th, 2009 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள்.
Comments: none
சிவவாக்கியர் – 90
90. தில்லையே வணங்கிநின்று தெண்டனிட்ட வாயுவை
எல்லையைக் கடந்துநின்று ஏகபோக மாய்கையோ
டெல்லையைக் கடந்துநின்று சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையுஞ் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே.
வடக்கு எல்லை – இடகலை
தெற்கு எல்லை – பிங்கலை
நடு எல்லை – தில்லை – சுழுமுனை
உயிர் மூச்சானது தில்லையாகிய சுழிமுனையில் வணங்கி ஒடுங்கி நின்று விம்மிப் பூரித்து, மாயையின் எல்லையைக் கடந்து பிய்த்துக்கொண்டு வெளிவரும்போது சொர்க்கலோக வெளியாம் ஆகாயம் காணும்( ஆகாயம் கபாலக் குக்கைக்குள்ளேதான் உள்ளது!!!). ஆங்கே சிவப்பும்(சக்தி) வெள்ளையும்(ஞானமாம் சிவன்) சேர்ந்து சிவசக்தியாகும். அதனுடன் உயிர் கலக்கும்.
திருமந்திரம்
************
பூதல [...]
Posted: December 27th, 2008 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள்.
Comments: 2
