Category Archives: அநுமன் துதி

WHICH SPIDERS ARE POISONOUS?

There is hardly a place in the world you can go where you won’t find spiders. Tthey can be found at sea level and on Mt.Everest, in forests, meadows, swamps, deserts, and in caves underground.

Many people have a fear of spiders, because some types are known to be poisonous. All spiders, except two species, have poison rut this doesn’t mean that the spiders with poison glands. But this does not mean that spiders with poison glands can harm man. The poison glands in spiders are controlled by them and used in aye. For example, spiders which spin nets to catch their prey do heir poison.

ஆஞ்சனேயன் துதி

ஆஞ்சநேயன் துதி
******************

ஆஞ்சநேயன் துதி
********************
மிகச் சிவந்த முகமுடைய வானரன்
…..மேரு போன்ற எழிலுரு வாய்ந்தவன்
பகை யழித்திடும் வாயுவின் புத்திரன்
…..பாரிசாத மர நிழல் வாழ்பவன்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன்
…..ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன்.

அரக்கர் கூட்டம் அழித்து மகிழ்பவன்
……ஆளும் இராமனின் நாமம் கேட்டிடில்
சிரத்தின் மீதிவன் கூப்பிய கையுடன்
……திரண்ட கண்ணில் நீர்சோரத் துதிப்பவன்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின்
……ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின்

சித்த வேகமும் வாயுவின் வேகமும்
……சேர்ந்தவன் தன் புலன்களை வென்றவன்
புத்தி மிக்கவர் தம்முட் சிறந்தவன்
……புகழி ராமனின் தூதுவன் வாயுவின்
சேயன் வானர சேனையின் முக்கியன்
……சென்னி தாழ்த்தியச் செம்மலைப் போற்றுவேன்.

யாரும் செய்வதற் கேயரி தானதை
…..ஐயநீ செய்குவை ஏதுனக் கரியது?
பாரில் என்செயல் நீநிறை வேற்றிவை.
…..பரிவின் ஆழிநீ இராம தூதனே!
ஆஞ்சநேயனே! அஞ்சலி செய்கிறேன்!
…..ஆஞ்சநேயனே! அஞ்சலி செய்கிறேன்!

அறிவு மற்றும் உடல் வலி நற்புகழ்
…..ஆளும் சொற்றிறம், அச்சமிலா மனம்
வறிய புன்பிணி நீங்கிய மேநிலை
…..வளரும் தைரியம் மேவிடும் நிச்சயம்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்திடின்
……அனுபவத் தினில் இவைபெற லாகுமே!

(ஆஞ்சநேயன் கோயிலில் கொடுத்த ஒரு அறிவிப்புத் தாளிலிருந்து எடுக்கப்பட்டது.)

அநுமன் துதி

ஸ்ரீஇராம ஜெயம்

**************

அநுமன் துதி

**************

 

ஓம் அசோகவனம் அழித்தவனே போற்றி

ஓம் அடலுடை வீரா போற்றி

ஓம் அபயம் தருபவனே போற்றி

ஓம் அழியா ஆன்மா உடையவனே போற்றி

ஓம் அனந்த சக்தி கொண்டாய் போற்றி

ஓம் அங்கதன் மெச்சிய அமைச்சரே போற்றி

ஓம் அணுவில் புகுந்தவனே போற்றி

ஓம் அஞ்சனை புத்திரா போற்றி

ஓம் அம்மை சோகம் தீர்த்தவனே போற்றி

ஓம் அம்மையின் ஆசி பெற்றவனே போற்றி

ஓம் அருச்சுனன் தேர்க்கொடி அமர்ந்தவனே போற்றி

ஓம் அனுமேயம் கடந்தவனே போற்றி

ஓம் அனுமனே போற்றி

ஓம் அனுமந்தா போற்றி

ஓம் அன்றினர் அழித்தவனே போற்றி

ஓம் ஆசையை வென்றவனே போற்றி

ஓம் ஆதவனைப் பிடித்தவனே போற்றி

ஓம் ஆதவன் மாணாக்கனே போற்றி

ஓம் ஆயகலைகள் அத்தனையும் அறிந்தவனே போற்றி

ஓம் அசுர குலத்து எமனே போற்றி

ஓம் ஆஞ்சனேயா போற்றி

ஓம் ஆயுள் வளர்ப்பவனே போற்றி

ஓம் இராம தூதா போற்றி

ஓம் இராம பக்தா போற்றி

ஓம் இராகுவைப் பிடித்தவனே போற்றி

ஓம் இலங்கை அழித்தவனே போற்றி

ஓம் இலங்கணி பணிந்தவனே போற்றி

ஓம் இலக்குவனுக்கு உயிரூட்டியவனே போற்றி

ஓம் இரஞ்சித முகத்தோனே போற்றி

ஓம் இரத்தின குண்டலம் அணிந்தவனே போற்றி

ஓம் இந்திர சித்தை வென்றவனே போற்றி

ஓம் உயிர்ப்பின் மைந்தா போற்றி

ஓம் ஊழி கடந்தவனே போற்றி

ஓம் எப்பவும் இராமா என்றிடும் தேவா போற்றி

ஓம் ஐம் புலன் அடக்கினவனே போற்றி

ஓம் கங்கையில் நடந்தவனே போற்றி

ஓம் கடல் கடந்தாய் போற்றி

ஓம் கடிகையில் அமர்ந்தவனே போற்றி

ஓம் கணையாழி ஈந்தவா போற்றி

ஓம் கணகண கண்டாமணி நாதனே போற்றி

ஓம் கதாயுதபாணியே போற்றி

ஓம் காமனை வென்றவனே போற்றி

ஓம் காலநேமி அழித்தவனே போற்றி

ஓம் காலத்தை வென்றவனே போற்றி

ஓம் கிரீட குண்டலனே போற்றி

ஓம் கிட்கிந்தை வாழ்ந்தவனே போற்றி

ஓம் கோடை இடிக் குரலோனே போற்றி

ஓம் கோள் துயர் நீக்கும் கோமகனே போற்றி

ஓம் கேதுவை அடித்தவனே போற்றி

ஓம் கேசரி மைந்தா போற்றி

ஓம் சக்தியின் இருப்பிடமே போற்றி

ஓம் சஞ்சிதம் களைபவனே போற்றி

ஓம் சஞ்சீவி மலை கொணர்ந்தவனே போற்றி

ஓம் சத்திய உருவே போற்றி

ஓம் சர்வ ரோகம் தீர்ப்போனே போற்றி

ஓம் சிரஞ்சீவியே போற்றி

ஓம் சீதாராமனை நெஞ்சில் காட்டியவனே போற்றி

ஓம் செங்கமலக் கையுடையவனே போற்றி

ஓம் செந்தூர நெற்றி உடையவனே போற்றி

ஓம் சொல்லின் செல்வா போற்றி

ஓம் சுந்தர காண்ட நாயகனே போற்றி

ஓம் சுடர் ஒளித் திருவே போற்றி

 

ஓம் சூடாமணி கண்டவனே போற்றி

ஓம் ஞான ஒளியே போற்றி

ஓம் தசமுகப் பிரபுவே போற்றி

ஓம் தண்டைக் கழலோனே போற்றி

ஓம் தத்துவ ஞானியே போற்றி

ஓம் திரிசடை புகழ்ந்தோய் போற்றி

ஓம் திருவடி தாங்குபவனே போற்றி

ஓம் தீ£வினை அழிப்பவனே போற்றி

ஓம் துளசி மாலை அணிந்தவனே போற்றி

ஓம் நட்பின் இலக்கணமே போற்றி

ஓம் நவசக்தி மைந்தா போற்றி

ஓம் நறுமணம் கமழும் மேனியுடையவனே போற்றி

ஓம் நான்கு திருக்கரத்தை உடையவனே போற்றி

ஓம் நிகும்பலை யாகம் அழித்தவனே போற்றி

ஓம் நித்தியனே போற்றி

ஓம் நிரந்தரமானவனே போற்றி

ஓம் பராக்கிரமா போற்றி

ஓம் பாரிசாத மரத்தடி அமர்தவனே போற்றி

ஓம் பாவ விமோசனம் தருபவனே போற்றி

ஓம் பிரமச்சாரியே போற்றி

ஓம் பீமனின் அண்ணனே போற்றி

ஓம் பெரிய பெருமாளே போற்றி

ஓம் மகா தவசியே போற்றி

ஓம் மங்களம் தருவோனே போற்றி

ஓம் மஞ்சுள மாருதியே போற்றி

ஓம் மதுவனம் திரிந்தவனே போற்றி

ஓம் மருத மர வாசனே போற்றி

ஓம் மாதங்க வனப் பிரியனே போற்றி

ஓம் மாயையை நீக்குவபனே போற்றி

ஓம் மேதாவியே போற்றி

ஓம் மைநாகம் கண்டோய் போற்றி

ஓம் யோகத்தின் இலக்கணமே போற்றி

 

ஓம் வச்சிர உடல் உடையவனே போற்றி

ஓம் வச்சிராயுதம் உடைத்தவனே போற்றி

ஓம் வடிவழகு உடையவனே போற்றி

ஓம் வலிமுகம் கொண்டாய் போற்றி

ஓம் வாக்கு வன்மை தருபவனே போற்றி

ஓம் வாயு குமாரா போற்றி

ஓம் வானரர் தலைவா போற்றி

ஓம் விசுவ உருக் கொண்டவனே போற்றி

ஓம் விண்ணில் பறந்தவா போற்றி

ஓம் வித்தை ஈந்தவா போற்றி

ஓம் வீர சூர பராக்கிரமா போற்றி

ஓம் வெண்ணைப் பிரியனே போற்றி

ஓம் வேகத்தின் எல்லையே போற்றி

ஓம் வைதேகி புகழ்ந்தோய் போற்றி

****************************************