Category Archives: துதி
WHICH SPIDERS ARE POISONOUS?
There is hardly a place in the world you can go where you won’t find spiders. Tthey can be found at sea level and on Mt.Everest, in forests, meadows, swamps, deserts, and in caves underground.
Many people have a fear of spiders, because some types are known to be poisonous. All spiders, except two species, have poison rut this doesn’t mean that the spiders with poison glands. But this does not mean that spiders with poison glands can harm man. The poison glands in spiders are controlled by them and used in aye. For example, spiders which spin nets to catch their prey do heir poison.
வேண்டல் 108

ஓம் அகந்தை அழித்து அருளே
ஓம் அச்சம் நீக்கி அருளே
ஓம் அஞ்சலென அருளே
ஓம் அஞ்சி அழைப்போர்க்கு அருளே
ஓம் அடைக்கலம் தந்து அருளே
ஓம் அமருலகு சேர்த்து அருளே
ஓம் அடியார் தீவினைகள் தீர்த்து அருளே
ஓம் அபயம் அருளே
ஓம் அவா அறுத்து அருளே
ஓம் அழுக்காறு நீக்கி அருளே
ஓம் அழுதவர் கண்ணீர் துடைத்து அருளே
ஓம் அறியாமை அகற்றி அருளே
ஓம் அன்பும் அறமும் வளர்த்து அருளே
ஓம் ஆசு நீக்கி அருளே
ஓம் ஆசைகளை அறுத்து அருளே
ஓம் இடர் களைந்து அருளே
ஓம் இம்மை மறுமை அளித்து அருளே
ஓம் இருள்மாயப் பிறப்பு அறுத்து அருளே
ஓம் இன்னருள் சுரந்து அருளே
ஓம் இன்னல் தீர்த்து அருளே
ஓம் இன்பம் தழைக்க அருளே
ஓம் இன்மொழி தந்து அருளே
ஓம் ஈயென இரவா நிலை தந்து அருளே
ஓம் உயர்வு அளித்து அருளே
ஓம் உலோபம் நீக்கி அருளே
ஓம் உறுபசி அழித்து அருளே
ஓம் உறுபிணி ஒழித்து அருளே
ஓம் ஊக்கம் தந்து அருளே
ஓம் ஊழித் தொல்வினை அறுத்து அருளே
ஓம் ஊனம் நீக்கி அருளே
ஓம் எப்பிறப்பும் மறவாமை தந்து அருளே
ஓம் எம பயம் நீக்கி அருளே
ஓம் ஏக்கம் தீர்த்து அருளே
ஓம் ஏத்துவார் இடர் தீர்த்து அருளே
ஓம் ஏழைக்கு இறங்கி அருளே
ஓம் ஏற்றம் அருள்வாய்
ஓம் ஐம்புலன் அடக்க அருளே
ஓம் ஐயம் தீர்த்து அருளே
ஓம் என்மலம் அறுத்து அருளே
ஓம் என்னாவி காத்து அருளே
ஓம் என்றும் இன்பம் தழைக்க அருளே
ஓம் ஏத்துவார் இடர் தீர்த்து அருளே
ஓம் ஓவாபிணி ஒழித்து அருளே
ஓம் குரோதம் ஒழித்து அருளே
ஓம் குலம் காத்து அருளே
ஓம் குறளை களைந்து அருளே
ஓம் குறைகள் களைந்து அருளே
ஓம் கேடுகள் களைந்து அருளே
ஓம் கொடுமை அழித்து அருளே
ஓம் கொடையுள்ளம் கொண்டு அருளே
ஓம் சிக்கல் தீர்த்து அருளே
ஓம் சித்தத்தே நடம் ஆடி அருளே
ஓம் சித்தி தந்து அருளே
ஓம் சிந்தை தெளியவைத்து அருளே
ஓம் சிவகதி தந்து அருளே
ஓம் சினத்தை வேறுடன் அறுத்து அருளே
ஓம் சீர் அருளே
ஓம் சூலை தீர்த்து அருளே
ஓம் செருக்கு அழித்து அருளே
ஓம் செல்வம் அருளே
ஓம் சேவடி சிந்தையில் வைக்க அருளே
ஓம் சோர்வு அகற்றி அருளே
ஓம் ஞானம் தந்து அருளே
ஓம் தத்துவ ஞானம் தந்து அருளே
ஓம் தவநெறி சேர்த்து அருளே
ஓம் தளரா மனம் தந்து அருளே
ஓம் தனமும் கல்வியும் தந்து அருளே
ஓம் தன்னையறியும் வழிகாட்டி அருளே
ஓம் தீவினை தீர்த்து அருளே
ஓம் துதிப்போர்க்கு அருள்வாய்
ஓம் துயர் எல்லாம் துடைத்து அருளே
ஓம் நலமெலாம் நல்கி அருளே
ஓம் நித்திரை நீக்கி அருளே
ஓம் பகை போக்கி அருளே
ஓம் பணிந்தோர்க்குப் பங்குடன் அருளே
ஓம் பணிந்தார் பாவங்கள் தீர்த்து அருளே
ஓம் பந்தபாசம் களைந்து அருளே
ஓம் பரகதி அருள்வாய்
ஓம் பழி தீர்த்து அருளே
ஓம் பற்றிலா நெஞ்சம் தந்து அருளே
ஓம் பற்றியவினைகள் போக்கி அருளே
ஓம் பாவம் அழித்து அருளே
ஓம் பிணி தீர்த்த்து அருளே
ஓம் பிணியிலா வழ்வு தந்து அருளே
ஓம் பிழைசெய்யா நெஞ்சம் தந்து அருளே
ஓம் பிறப்பு இறப்பு அறுத்து அருளே
ஓம் மதம் நீக்கி அருளே
ஓம் மதிநலம் தந்து அருளே
ஓம் மயக்கம் தீர்த்து அருளே
ஓம் மறவா நினைவைத் தந்து அருளே
ஓம் மன மருட்சி நீக்கி அருளே
ஓம் மாண்புடைய நெறி தந்து அருளே
ஓம் முத்தி தந்து அருளே
ஓம் மும்மலம் அழித்து அருளே
ஓம் மேன்மை தந்து அருளே
ஓம் மோனத்தே ஒளி காட்டி அருளே
ஓம் வஞ்சம் நீக்கி அருளே
ஓம் வரங்கள் தந்து அருளே
ஓம் வல்வினை தீர்த்து அருளே
ஓம் வளமெலாம் தந்து அருளே
ஓம் வறுமை ஒழித்து அருளே
ஓம் வார்வினை தீர்த்து அருளே
ஓம் விடாமுயற்சி தந்து அருளே
ஓம் விரும்பியன எல்லாம் தந்து அருளே
ஓம் வெம்பவம் நீக்கி அருளே
ஓம் வெம்மைகள் நீக்கி அருளே
ஓம் வெகுளி அறுத்து அருளே
ஓம் வெற்றி தந்து அருளே
*****************************
ஆஞ்சனேயன் துதி
ஆஞ்சநேயன் துதி
******************
ஆஞ்சநேயன் துதி
********************
மிகச் சிவந்த முகமுடைய வானரன்
…..மேரு போன்ற எழிலுரு வாய்ந்தவன்
பகை யழித்திடும் வாயுவின் புத்திரன்
…..பாரிசாத மர நிழல் வாழ்பவன்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன்
…..ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன்.
அரக்கர் கூட்டம் அழித்து மகிழ்பவன்
……ஆளும் இராமனின் நாமம் கேட்டிடில்
சிரத்தின் மீதிவன் கூப்பிய கையுடன்
……திரண்ட கண்ணில் நீர்சோரத் துதிப்பவன்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின்
……ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின்
சித்த வேகமும் வாயுவின் வேகமும்
……சேர்ந்தவன் தன் புலன்களை வென்றவன்
புத்தி மிக்கவர் தம்முட் சிறந்தவன்
……புகழி ராமனின் தூதுவன் வாயுவின்
சேயன் வானர சேனையின் முக்கியன்
……சென்னி தாழ்த்தியச் செம்மலைப் போற்றுவேன்.
யாரும் செய்வதற் கேயரி தானதை
…..ஐயநீ செய்குவை ஏதுனக் கரியது?
பாரில் என்செயல் நீநிறை வேற்றிவை.
…..பரிவின் ஆழிநீ இராம தூதனே!
ஆஞ்சநேயனே! அஞ்சலி செய்கிறேன்!
…..ஆஞ்சநேயனே! அஞ்சலி செய்கிறேன்!
அறிவு மற்றும் உடல் வலி நற்புகழ்
…..ஆளும் சொற்றிறம், அச்சமிலா மனம்
வறிய புன்பிணி நீங்கிய மேநிலை
…..வளரும் தைரியம் மேவிடும் நிச்சயம்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்திடின்
……அனுபவத் தினில் இவைபெற லாகுமே!
(ஆஞ்சநேயன் கோயிலில் கொடுத்த ஒரு அறிவிப்புத் தாளிலிருந்து எடுக்கப்பட்டது.)










