திருவெம்பாவை – 2
நாள் இரண்டு – பாடல் இரண்டு பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். எழுப்புபவள்: சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே! அல்லும் பகலும் நாம் பேசும் போது “யாவும் கடந்து நிற்கின்ற ஒளி வடிவினனான இறைவனுக்கே என் [...]
Posted: December 30th, 2009 under சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி.
Comments: none
திருப்பாவை – 15
நாள் பதினைந்து – பாடல் பதினைந்து எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ சில்லென்றழையேன் மீன் நங்கைமீர் போதர்கின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லை நீ போதராய் உனக்கென்ன வேறுடையை எல்லோரும் போந்தாரோ போந்தார் போல் எண்ணிக் கொள் வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயானைப் பாடேலேரெம்பாவாய். எழுப்புபவர்கள்: இளம் கிளியைப் போன்றவளே! இன்னுமா உறங்குகின்றாய்? உறங்குவதுபோல் இருப்பவள்: சில்லன்று கத்தாதீர்கள் பெண்களே. இதோ வருகின்றேன். எழுப்புபவர்கள்: [...]
Posted: December 30th, 2009 under திருப்பாவை, பக்தி, வைணவம்.
Comments: none
திருவெம்பாவை – 1
நாள் ஒன்று பாடல் ஒன்று ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். இப்பதிகம் திருவண்ணாமலையில் மாணிக்கவாசக சுவாமிகளால் பாடப்பெற்றது. சிறுமிகள் பாவை நோன்பு நோற்பதைக் கண்டு, மாணிக்கவாசக சுவாமிகள் தன்னையும் பாவையாக பாவித்து பாடியது. ஒரு சீவாத்மா, இந்த [...]
Posted: December 29th, 2009 under சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி.
Comments: none

