ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

பழமொழி 600

496.பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
497.படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
498.படிக்கிறது இராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோயில்.
499.பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
500.பத்தாம் பேறு பாடையில் வைக்கும்
501.பத்து அரிசியும் வேகவில்லை; பாவியின் ஆவி போகவில்லை.
502.பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
503.பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
504.பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
505.பழமொழியில் உமி கிடையாது
506.பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததுபோல்
507.பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
508.பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
509.பிள்ளையாருக்குப் பெண் தேடுவது போல்
510.பிள்ளையின் அருமை பெற்றவளுக்குத்தான் தெரியும்.
511.பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
512.புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெளுப்பான்.
513.புலி பசித்தாலும் புல் தின்னாது.
514.    பூ மலர்ந்து கெட்டது , வாய் விரிந்து கெட்டது
515.பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
516.பெண் என்றால் பேயும் இரங்கும்
517.பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார்;  சுவற்றுக்கு  மண் இட்டுப்பார்.
518.பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.
519.பெற்ற தாய் மூதேவி; புகுந்த தாரம் சீதேவி.
520.பெற்றவள் வயிற்றைப் பாப்பாள்; பெண்டாட்டி மடியைப் பாப்பாள்.
521.பேயும் அறியும் பெஞ்சாதி பிள்ளையை
522.பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
523.பொல்லாக் காலம் சொல்லாமல் வந்தது
524.போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
525.போன மச்சான் திரும்பி வந்தான்

Comments

Comment from ashab
Time: February 2, 2010, 1:54 pm

un mayil ungal pazhamozhi arumai.naan migavum virumbugirn.
ungal muyarchi verti perattum

Write a comment