சிவவாக்கியர் – 90
90. தில்லையே வணங்கிநின்று தெண்டனிட்ட வாயுவை
எல்லையைக் கடந்துநின்று ஏகபோக மாய்கையோ
டெல்லையைக் கடந்துநின்று சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையுஞ் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே.
வடக்கு எல்லை – இடகலை
தெற்கு எல்லை – பிங்கலை
நடு எல்லை – தில்லை – சுழுமுனை
உயிர் மூச்சானது தில்லையாகிய சுழிமுனையில் வணங்கி ஒடுங்கி நின்று விம்மிப் பூரித்து, மாயையின் எல்லையைக் கடந்து பிய்த்துக்கொண்டு வெளிவரும்போது சொர்க்கலோக வெளியாம் ஆகாயம் காணும்( ஆகாயம் கபாலக் குக்கைக்குள்ளேதான் உள்ளது!!!). ஆங்கே சிவப்பும்(சக்தி) வெள்ளையும்(ஞானமாம் சிவன்) சேர்ந்து சிவசக்தியாகும். அதனுடன் உயிர் கலக்கும்.
திருமந்திரம்
************
பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலையொண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில்திரு வம்பலம்
ஏதமில் பூதாண்டத் தெல்லையி னீறன்றே.
வெண்பா
********
ஆணவ மாமெருமை ஆனைகரி ஆம்மருள்காண்
ஏணஅரி மாவினையாம் ஏர்பரியும் – ஆணமார்
நற்செறிவாம் வெள்ளானை ஞானமாம் ஆனேறும்
இற்புகலன் பின்புருமேல் எண்.
Posted: December 27th, 2008 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள்.
Comments: 2
Comments
Comment from nandhitha
Time: February 19, 2010, 10:16 pm
அன்பு சால் வணக்கம்
தங்கள் பதிவு ஒவ்வொன்றும் போற்றிப் பாதுகாக்கப் படவேண்டியவை, இணைய தளங்களில் சிறந்து விளங்குகிறது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
அன்புடன்
நந்திதா
Comment from ஞானவெட்டியான்
Time: February 20, 2010, 9:16 am
அன்புடையீர்,
மிக்க நன்றி அம்மா.


Write a comment