நவராத்திரி – ஐந்தாம் நாள்
ஐந்தாம் நாள் பராசக்தியை மகேசுவரியாக அலங்கரித்து வழிபடவேண்டும். ரிடப வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் தருமத்தின் திருவுருவமாம் இச் சிவ சக்தி அளவற்ற பெரும் உடலைக் கொண்டதால் “மகதீ” என அழைக்கப்படுகிறாள். அனைத்து மங்களங்களையும் தருபவள். உழைப்பவருக்கு அருள்பவள்.
இவளை கெளரியாகவும், சிம்ம வாகினியாகவும் பூசிப்போரும் உண்டு.
சும்ப நிசும்ப அவுணர்களை அழித்து அகிலஉலகையும் உய்வித்தவள்.


படையல்: புளியோதரை
துதிக்கவேண்டிய இராகம்: பந்துவராளி
Posted: April 3rd, 2008 under சைவம், பக்தி.
Comments: none

Write a comment