பிரபுலிங்க லீலை-2.6
பிரபுலிங்க லீலை
*******************
2.6 ஒழுகுறும் அருவி யீட்டம் ஒலியினா னகுவெண் டிங்கள்
பழகுறு முடற்க ளங்காற் பாகசா தனன்கூர்ங் கோட்டு
மழகளி றுமிழ்ம தத்தான் மலர்மிசைக் கடவு ளுர்தி
அழகுறு நடையா லன்றி அறிதரப் படாவக் குன்றில்
அருவியீட்டம் – அருவிகளின் தொகுதி,
நகு – விளங்குகின்ற,
பாகசாதனன் – தேவர் கோமான்,
மழகளிறு – இளமையினையுடைய வெள்ளையானை,
மலர்மிசைக் கடவுள் – நான்முகன்,
ஊர்தி – ஊர்தியாகிய அன்னம்.
கைலைமலை வெண்ணிறமாக இருப்பதால் ஆங்கு வரும் அருவித் தொகுதியை ஒலியினாலும், திங்களைக் களங்கத்தாலும், வெள்ளையானையை மதநீராலும், அன்னத்தை அதனுடைய அழகிய நடையாலும் அறியலாமேயன்றி வேறு வகையாக அறிதல் இயலாது.










